×

அந்தமானில் ஆதிவாசிகள் ஆத்திரம் அமெரிக்க பயணி அம்பு எய்து கொலை

போர்ட்பிளேயர்: அந்தமான் நிகோபார் தீவுக்கு சென்ற அமெரிக்க சுற்றுலாப் பயணியை பழங்குடியின மக்கள் அம்பை எய்து கொலை செய்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவின் சென்டினல் தீவு பகுதியில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மொத்தம் 40 பேர் கொண்ட அந்த குழுவினர் பிற மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதவர்கள். அவர்களை சந்திக்க அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஜான் ஆலன் (27) என்பவர், அங்கு கடந்த மாதம் 16ம் தேதி சென்றார். அவரை அப்பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த தீவில் விட்டுச்சென்றுள்ளனர்.

பின்னர் அவர் மாயமானார். கடந்த 14ம் தேதி அங்கு சென்ற 7 மீனவர்களும் ஜான் ஆலன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை பழங்குடியினர் வில் அம்பை எய்து கொலை செய்தது தெரியவந்தது. அவரது சடலம் இன்னும் மீட்கப்படவில்லை. இதையடுத்து ஜான் ஆலனுக்கு உதவிய மீனவர்கள் 7 பேரையும் அந்தமான் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஜான் ஆலன் பழங்குடியினரை கிறிஸ்தவத்திற்கு மாற்ற முயன்றதால் வெறுப்படைந்த அவர்கள் ஜானை அம்பு எய்தி கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adivasis ,passenger ,American , American traveler, killed, tribesman,
× RELATED பயணிகளின் சிரமத்தைக் குறைக்க நடவடிக்கை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்